முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில கூடைப்பந்து போட்டியில் திருவள்ளூர் அணி வெற்றி


முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில கூடைப்பந்து போட்டியில் திருவள்ளூர் அணி வெற்றி
x

முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டு போட்டிகள் சென்னையில் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது.

சென்னை,

முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டு போட்டிகள் சென்னையில் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடந்த கூடைப்பந்து போட்டியில் பள்ளி அணிகளுக்கான ஆண்கள் பிரிவின் ஆட்டம் ஒன்றில் திருவாரூர் மாவட்டம் 74-47 என்ற புள்ளி கணக்கில் திண்டுக்கல்லை தோற்கடித்தது.

மற்ற ஆட்டங்களில் தூத்துக்குடி அணி 65-15 என்ற புள்ளி கணக்கில் அரியலூரையும், சேலம் அணி 79-44 என்ற புள்ளி கணக்கில் செங்கல்பட்டுவையும், தேனி அணி 74-49 என்ற புள்ளி கணக்கில் கடலூரையும், திருவள்ளூர் அணி 70-35 என்ற புள்ளி கணக்கில் மயிலாடுதுறையையும் வென்றன.

இதன் பெண்கள் பிரிவில் ஈரோடு மாவட்ட அணி 41-4 என்ற புள்ளி கணக்கில் கிருஷ்ணகிரியையும், சென்னை அணி 32-7 என்ற புள்ளி கணக்கில் புதுக்கோட்டையும், திண்டுக்கல் 58-55 என்ற புள்ளி கணக்கில் கடலூரையும், தஞ்சாவூர் அணி 51-36 என்ற புள்ளி கணக்கில் செங்கல்பட்டுவையும் தோற்கடித்தன.

25-ந் தேதி வரை தொடர்ந்து நடைபெறும் இந்த போட்டியில் நேற்றைய ஆட்டங்கள் முடிவில் பதக்க பட்டியலில் சென்னை மாவட்டம் 12 தங்கம், 5 வெள்ளி, 5 வெண்கலத்துடன் முதலிடத்திலும், திருவள்ளூர் 6 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலத்துடன் 2-வது இடத்திலும், திருச்சி 4 தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலத்துடன் 3-வது இடத்திலும் உள்ளன.


Next Story