உலக டேபிள் டென்னிஸ் போட்டி: தமிழக வீரர் சத்யன் அபாரம்


உலக டேபிள் டென்னிஸ் போட்டி: தமிழக வீரர் சத்யன் அபாரம்
x

கோப்புப்படம் 

தமிழகத்தை சேர்ந்தவரான ஜி.சத்யன் கலப்பு இரட்டையர் பிரிவில் வீராங்கனை மணிகா பத்ராவுடன் ஜோடி சேர்ந்து எரிக் ஜோட்டி -லுக்காகுமாஹரா கூட்டணியை வீழ்த்தினார்.

டர்பன்,

உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி தென்ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சரத்கமல்- ஜி.சத்யன் ஜோடி 11-5, 11-4, 15-13 என்ற நேர் செட்டில் பென்ஸ் மேஜரோஸ் (ஹங்கேரி)- ஆன்டர்ஸ் லின்ட் (டென்மார்க்) இணையை தோற்கடித்து கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றது.

இதே போல் தமிழகத்தை சேர்ந்தவரான ஜி.சத்யன் கலப்பு இரட்டையர் பிரிவில் வீராங்கனை மணிகா பத்ராவுடன் ஜோடி சேர்ந்து 8-11, 11-7, 11-6, 11-6 என்ற செட் கணக்கில் எரிக் ஜோட்டி -லுக்காகுமாஹரா (பிரேசில்) கூட்டணியை வீழ்த்தினார். அதே சமயம் ஒற்றையர் 2-வது சுற்றில் தமிழகத்தின் சரத்கமல் 4-11, 11-13, 8-11, 10-12 என்ற நேர் செட்டில் தென்கொரியாவின் லீ சங் சூவிடம் பணிந்தார்.


Next Story