சென்னை ஓபன் டென்னிஸ்: இரட்டையர் பிரிவு கால்இறுதியில் இந்திய ஜோடி வெளியேற்றம்


சென்னை ஓபன் டென்னிஸ்: இரட்டையர் பிரிவு கால்இறுதியில் இந்திய ஜோடி வெளியேற்றம்
x

இந்திய ஜோடியினர் சில கேம்களை வென்றார்களே தவிர ஆட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர முடிவில்லை.

சென்னை,

இரட்டையர் பிரிவின் கால்இறுதியில் இந்தியாவின் இளம் ஜோடியான கர்மன் தண்டி- ருதுஜா போசேல் கூட்டணி, கேப்ரியல்லா டாப்ரோஸ்கி (கனடா)- லுசா ஸ்டெபானி (பிரேசில்) இணையுடன் மோதியது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் ஆடிய இந்திய ஜோடியினர் சில கேம்களை வென்றார்களே தவிர ஆட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர முடிவில்லை.

இறுதியில் 0-6, 3-6 என்ற நேர் செட்டில் கர்மன் தண்டி- ருதுஜா ஜோடி தோற்று வெளியேறியது. அத்துடன் இந்த போட்டியில் இந்தியாவின் சவால் முழுமையாக முடிவுக்கு வந்தது.


Next Story