சென்னை ஓபன் டென்னிஸ்: இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய அணிகள்


சென்னை ஓபன் டென்னிஸ்: இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய அணிகள்
x

இதன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சுமித் நாகல் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

சென்னை,

சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த இரட்டையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ராம்குமார்- சகெத் மைனெனி ஜோடி 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் ஜப்பானின் மாட்சுய்- கைடோ உசுகி இணையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் ரித்விக் சவுத்ரி போலிபள்ளி- நிக்கி பூனச்சா கூட்டணி 6-3, 4-6, 10-7 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் ஸ்னைட்டர்- வால்னெர் ஜோடியை சாய்த்து இறுதிசுற்றை எட்டியது.

இதில் நடைபெற்ற ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சுமித் நாகல் 6-3, 6-3 என்ற நேர் செட்டில் டொமினிக் பாலனை (செக்குடியரசு) வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் முகுந்த் சசிகுமார் (இந்தியா) 7-6 (8-6), 2-6, 4-6 என்ற செட் கணக்கில் டாலிபோர் ஸ்வர்சினாவிடம் (செக் குடியரசு) 2 மணி 54 நிமிடங்கள் போராடி வீழ்ந்தார்.


Next Story