சென்னை ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் சுமித் நாகல்


சென்னை ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் சுமித் நாகல்
x

Image Courtesy: @IndTennisDaily

சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் நடந்து வருகிறது.

சென்னை,

சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்றில் இந்தியாவின் சுமித் நாகல் 7-5, 6-2 என்ற நேர் செட்டில் போனியோவை (இத்தாலி) வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் லுகா நார்டி (இத்தாலி) 7-5, 6-3 என்ற நேர் செட்டில் பெர்னார்ட் டாமிக்கை (ஆஸ்திரேலியா) வெளியேற்றினார். இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ராம்குமார்- சகெத் மைனெனி ஜோடி 7-6 (3), 6-4 என்ற நேர் செட்டில் ராய் ஹோ (சீனதைபே)- மாதுஸ்சிவ்ஸ்கி (போலந்து) இணையை வீழ்த்தியது.


Next Story