சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: ஆண்ட்ரே ரூப்லெவ் காலிறுதிக்கு முன்னேற்றம்

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதிக்கு ஆண்ட்ரே ரூப்லெவ் முன்னேறியுள்ளார்.
சின்சினாட்டி,
பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்று (ரவுண்ட் ஆப் 16) ஆட்டம் ஒன்றில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ், அமெரிக்க வீரரான பிரண்டன் நகஷிமா உடன் மோதினார்.
இதில் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரூப்லெவ் 7-6 மற்றும் 6-1 என்ற நேர் செட் கணக்கில் நகஷிமாவை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





