பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்; இந்திய வீரர் சுமித் நாகல் தோல்வி


பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்; இந்திய வீரர் சுமித் நாகல் தோல்வி
x

சுமித் நாகல் (image courtesy: ATP Tour Instagram via ANI)

முதல் சுற்றிலேயே தோல்வி கண்ட இந்திய வீரர் சுமித் நாகல் தொடரில் இருந்து வெளியேறினார்.

பாரீஸ்,

ஆண்டுதோறும் 4 வகையான 'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் 2-வது வருவது பிரெஞ்சு ஓபனாகும். இந்த ஆண்டுக்கான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய முன்னணி வீரரான சுமித் நாகல் ரஷியாவின் கரேன் கச்சனோவை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமாக செயல்பட்ட கரேன் கச்சனோவ் 6-2, 6-0, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் சுமித் நாகலை வீழ்த்தினார். இதையடுத்து முதல் சுற்றிலேயே தோல்வி கண்ட இந்திய வீரர் சுமித் நாகல் தொடரில் இருந்து வெளியேறினார்.

1 More update

Next Story