ஐ.டி.எப். பெண்கள் ஓபன் டென்னிஸ்: இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்


ஐ.டி.எப். பெண்கள் ஓபன் டென்னிஸ்: இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 11 March 2023 7:27 PM GMT (Updated: 11 March 2023 8:38 PM GMT)

ஐ.டி.எப். பெண்கள் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது.

பெங்களூரு,

ஐ.டி.எப். பெண்கள் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 241-வது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா 6-1, 6-1 என்ற நேர்செட்டில் சக நாட்டு வீராங்கனை ருதுஜா போசேல்லை விரட்டியடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

மற்றொரு அரைஇறுதியில் உலக தரவரிசையில் 163-வது இடத்தில் உள்ள செக்குடியரசு வீராங்கனை பிரன்டா புருவிர்தோவா 7-6 (7-2), 6-2 என்ற நேர்செட்டில் சுலோவேனியாவின் டாலிலா ஜாகுபோவிச்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் அங்கிதா ரெய்னா-பிரன்டா புருவிர்தோவா மோதுகிறார்கள்.


Next Story