கொரியா ஓபன் டென்னிஸ்: நிஷியோகா, ஷபோவலோவ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்


கொரியா ஓபன் டென்னிஸ்: நிஷியோகா, ஷபோவலோவ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
x

கொரியா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி சியோலில் நடந்து வருகிறது.

சியோல்,

கொரியா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி சியோலில் நடந்து வருகிறது.

இதில் இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் அமெரிக்காவின் ஜென்சன் புரூக்ஸ்பி, கனடாவின் டெனிஸ் ஷபோவலோவை எதிர்கொண்டார். இந்த போட்டியில் ஷபோவலோவ் 7-5, 6-4 என்ற செட் கணக்கில் ஜென்சனை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.

மற்றொரு அரையிறுதி போட்டியில் அமெரிக்க வீரர் அலெக்சாண்டர் கோவாசெவிக், ஜப்பான் வீரர் யோஷிடோ நிஷியோகாவுடன் மோதினார். இந்த போட்டியில் நிஷியோகா 6-3, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் அலெக்சாண்டரை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் டெனிஸ் ஷபோவலோவ், யோஷிடோ நிஷியோகா இருவரும் மோதுகின்றனர்.


Next Story