ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: அரை இறுதிக்குள் நுழைந்தார் அமெரிக்க வீரர் டெய்லர் பிரிட்ஸ்


ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: அரை இறுதிக்குள் நுழைந்தார் அமெரிக்க வீரர் டெய்லர் பிரிட்ஸ்
x

அரை இறுதியில் நோவாக் ஜோகோவிச்சை டெய்லர் பிரிட்ஸ் எதிர்கொள்கிறார்.

ரோம்,

உலக தரவரிசையில் முன்னணியில் இருக்கும் டாப்-8 வீரர்கள் மட்டும் பங்கேற்கும் ஏ.டி.பி. பைனல்ஸ் எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் பங்கேற்றுள்ள வீரர்கள் ரெட், கிரீன் என்று இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் நோவக் ஜோகோவிச், ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், ஆண்ட்ரே ரூப்லெவ் மற்றும் டேனில் மெட்வதேவ் ஆகியோர் 'ரெட்' பிரிவிலும், ரபேல் நடால், காஸ்பர் ரூட், பெலிக்ஸ் ஆகர்-அலியாசிம் மற்றும் டெய்லர் பிரிட்ஸ் ஆகியோர் 'கிரீன்' பிரிவிலும் இடம்பெற்றுள்ளனர்.

ஒவ்வொரு பிரிவில் உள்ள வீரர்கள், தங்கள் பிரிவில் உள்ள மற்ற வீரர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் வீரர்கள் அரைஇறுதிக்கு தகுதி பெறுவார்கள்.

இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் அமெரிக்க வீரர் டெய்லர் பிரிட்ஸ் உடன் கனடா வீரர் ஆகர் அலியாசிம் மோதினார். இந்த ஆட்டத்தின் 3 செட்களில் 7-6, 6-7, 6-2 என்ற கணக்கில் டெய்லர் பிரிட்ஸ் வெற்றி பெற்று அரை இறுதிக்குள் நுழைந்தார். இதையடுத்து அரை இறுதியில் நோவாக் ஜோகோவிச்சை டெய்லர் பிரிட்ஸ் எதிர்கொள்கிறார்.


Next Story