ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஜோகோவிச்


ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்:  இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஜோகோவிச்
x

கோப்புப்படம்

உலக டென்னிஸ் ஏ.டி.பி. ஆண்கள் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு ஜோகோவிச் முன்னேறி உள்ளார்.

துரின்,

உலக தரவரிசையில் முன்னணியில் இருக்கும் டாப்-8 வீரர்கள் மட்டும் பங்கேற்கும் ஏ.டி.பி. பைனல்ஸ் எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் பங்கேற்றுள்ள வீரர்கள் ரெட், கிரீன் என்று இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் நோவக் ஜோகோவிச், ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், ஆண்ட்ரே ரூப்லெவ் மற்றும் டேனில் மெட்வதேவ் ஆகியோர் 'ரெட்' பிரிவிலும், ரபேல் நடால், காஸ்பர் ரூட், பெலிக்ஸ் ஆகர்-அலியாசிம் மற்றும் டெய்லர் பிரிட்ஸ் ஆகியோர் 'கிரீன்' பிரிவிலும் இடம்பெற்றுள்ளனர்.

ஒவ்வொரு பிரிவில் உள்ள வீரர்கள், தங்கள் பிரிவில் உள்ள மற்ற வீரர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் வீரர்கள் அரைஇறுதிக்கு தகுதி பெறுவார்கள். அந்த வகையில் நோவக் ஜோகோவிச், டெய்லர் பிரிட்ஸ் ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றிருந்தனர்.

முன்னதாக நேற்று நடந்த போட்டியில் நோவக் ஜோகோவிச், டேனில் மெட்வதேவ்வை 6-3, 6-7 (5-7), 7-6 (7-2) என்ற செட் கணக்கில் வீழ்த்தி இருந்தார்.

இந்த நிலையில் இன்று நடந்த அரையிறுதிப் போட்டியில் நோவக் ஜோகோவிச் (செர்பியா)- டெய்லர் பிரிட்ஸ் (அமெரிக்கா) ஆகியோர் மோதினர். இந்த போட்டியில் ஜோகோவிச் 7-6 (5), 7-6 (6) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் டெய்லர் பிரிட்ஸ்ஸை 2-0 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி இறுதிபோட்டிக்கு ஜோகோவிச் முன்னேறி உள்ளார்.


Next Story