பெங்களூருக்கு எதிரான தோல்விக்கு என்ன காரணம் ? வெளிப்படையாக பேசிய தோனி..!!


Image Courtesy : BCCI / IPL
x
Image Courtesy : BCCI / IPL

சென்னை அணியின் கேப்டன் தோனி பெங்களூருக்கு எதிரான தோல்வி குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

மும்பை.

15வது ஐபிஎல் சீசன் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேயில் கடந்த மார்ச் மாதம் தொடங்கி தற்போது  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு-  சென்னை -  அணிகள் மோதின  .

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது. 174 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய சென்னை வீரர்கள் தொடக்கத்தில் சிறப்பாக செயல்பட்டாலும் பின்னர் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறினர்.

இதனால் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது 13  ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி 6-வது வெற்றியை பதிவு செய்தது.

போட்டி முடிந்த பிறகு பேசிய சென்னை அணியின் கேப்டன் தோனி கூறுகையில், "பெங்களூரு அணியை 170 ரன்களுக்கு கட்டுப்படுத்தி எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். நாங்கள் சிறந்த தொடக்கத்தைப் பெற வேண்டியிருந்தது.

நாங்கள் பேட்டிங் செய்யும்போது மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாகத்தான் இருந்தது. தொடக்க வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். இருப்பினும் அதன்பின் வந்த பேட்ஸ்மேன்கள் சீரான இடைவெளியில் தொடர்ந்து  விக்கெட்களை பறிகொடுத்ததுதான் தோல்விக்கு முக்கிய காரணம் . 

ரன்கள் எவ்வளவு தேவை என்பதை தெரிந்துகொண்டு ஆட்டத்திற்கு தகுந்து ஷாட்களை நாம் தான் மாற்றிக்கொள்ள வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. தவறுகள் குறித்து பேசி, இனி வரும் போட்டிகளில் சிறப்பாக செயல்படுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது’’ எனத் தெரிவித்தார்.

Next Story