இந்தியாவின் தலைமையில் வெற்றிகரமாக நடந்த ஜி-20 உச்சி மாநாடு - பிரதமர் மோடிக்கு நடிகர் ஷாருக்கான் புகழாரம்

இந்தியாவின் தலைமையில் ஜி-20 மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளதாக பிரதமர் மோடிக்கு நடிகர் ஷாருக்கான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2023-09-10 16:19 GMT

புதுடெல்லி,

டெல்லியில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாடு இன்று நிறைவடைந்தது. இந்தியா தலைமையில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாடு நிறைவடைந்த நிலையில் அடுத்த ஆண்டுக்கான ஜி-20 தலைமை பொறுப்பு பிரேசில் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதன் மூலம் அடுத்த ஆண்டுக்கான ஜி-20 உச்சிமாநாடு பிரேசில் நாட்டில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் இந்தியாவின் தலைமையில் ஜி-20 மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளதாக பிரதமர் மோடிக்கு நடிகர் ஷாருக்கான் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது;-

"இந்தியாவின் தலைமையில் வெற்றிகரமாக ஜி-20 உச்சி மாநாட்டை நடத்தியதற்காகவும், மக்களின் சிறப்பான எதிர்காலத்திற்காக உலக நாடுகளிடையே ஒற்றுமையை வளர்ப்பதற்காகவும் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்கள்.

இது ஒவ்வொரு இந்தியரின் இதயத்திலும் மரியாதை மற்றும் பெருமையை கொண்டு வந்துள்ளது. உங்கள் தலைமையின் கீழ், நாங்கள் தனிமையில் அல்ல, ஒருமையில் செழிப்போம். ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்."

இவ்வாறு நடிகர் ஷாருக்கான் பதிவிட்டுள்ளார்.


 

Tags:    

மேலும் செய்திகள்