மும்பையில் உள்ள குடோனில் பயங்கர தீவிபத்து
மராட்டிய மாநிலம் மும்பையின் ஜோகேஷ்வரி பகுதியில் உள்ள குடோனில் தீ விபத்து ஏற்பட்டது.
மும்பை,
மராட்டிய மாநிலம் மும்பை ஜோகேஷ்வரி பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் நேற்று இரவு பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் அறிந்ததும் நிகழ்விடத்திற்கு 7 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். எனினும், தீவிபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தீ விபத்தில் யாருக்கும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.