ராஜஸ்தானில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு
ராஜஸ்தானில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவானது.
ஜெய்பூர்,
ராஜஸ்தானின் பைக்னர் மாவட்டத்தின் வடமேற்கு பகுதிகளில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
உள்ளூர் நேரப்படி காலை 8.01 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டதா? போன்ற விவரங்கள் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை.