மத்தியபிரதேசம்: கொரோனா தாக்குதலுக்கு பாஜக எம்.எல்.ஏ. பலி

மத்தியபிரதேசத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பாஜக எம்.எல்.ஏ. உயிரிழந்தார்.

Update: 2021-05-10 23:31 GMT
போபால்,

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. வைரஸ் தாக்குதலுக்கு அனைத்து தரப்பினரும் இலக்காகி வருகின்றனர். 

இதற்கிடையில், மத்தியபிரதேச மாநிலம் ராய்ஹன் தொகுதி பாஜக எம்.எல்.ஏ.வாக செயல்பட்டு வந்தவர் ஜூகல் கிஷார் பஹ்ரி. இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிக்சிசை பெற்று வந்த எம்.எல்.ஏ. ஜூகல் கிஷார் பஹ்ரி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எம்.எல்.ஏ. உயிரிழப்பிற்கு மத்தியபிரதேச முதல்மந்திரி சிவராஜ் சிங் சவுகான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்