ராஜஸ்தானில் இன்று 16,520 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தனர்

ராஜஸ்தானில் தற்போது 1,12,218 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-05-23 16:56 GMT
ஜெய்ப்பூர்,

ராஜஸ்ஹான் மாநில சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு புதிதாக 6,521 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ராஜஸ்தானில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,16,042 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 113 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,703 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 16,520 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 

இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,96,121 ஆக அதிகரித்துள்ளது. ராஜஸ்தானில் தற்போது 1,12,218 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக ராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்