மேற்கு வங்கத்தில் இன்று 724 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்

மேற்கு வங்கத்தில் தற்போது 10,215 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-08-10 16:28 GMT
கொல்கத்தா,

மேற்கு வங்க மாநில சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, மேற்கு வங்கத்தில் இன்று 639 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மேற்கு வங்கத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 15,34,999 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 12 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18,252 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 724 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 

இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 15,06,532 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது 10,215 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக மேற்கு வங்க மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

மேலும் செய்திகள்