கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 17,681- பேருக்கு கொரோனா

கேரளாவில் கொரோனா தொற்றுக்கு இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 22,987- ஆக உயர்ந்துள்ளது.

Update: 2021-09-15 12:58 GMT
திருவனந்தபுரம், 

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 17,681 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பைக் கண்டறிய 97,070 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. கேரளாவில் தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 90 ஆயிரத்து 750 ஆக உள்ளது. தொற்று பாதிப்பால் மேலும்  208- பேர் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் கொரோனா தொற்றுக்கு இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 22,987- ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் செய்திகள்