ஆந்திரா முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதி

ஆந்திரா முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

Update: 2022-01-18 12:15 GMT

ஆந்திரா முன்னாள் முதல்-மந்திரி  சந்திரபாபு நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அவர் டுவிட்டர் பதிவில் ;

லேசான அறிகுறிகளுடன் தனக்கு  கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. நான் வீட்டில் என்னை தனிமைப்படுத்திக் கொண்டு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துக்கொண்டேன்.

என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் தங்களை விரைவில் பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். தயவுசெய்து பாதுகாப்பாகவும் கவனமாகவும் இருங்கள்.என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்