மணிப்பூரில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.9 ஆக பதிவு

மணிப்பூரில் இன்று காலை 6.56 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

Update: 2024-03-15 07:18 GMT

இம்பால்,

மணிப்பூரில் உள்ள உக்ருல் மாவட்டத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 6.56 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.9 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

உக்ருல் மாவட்டத்தில் 90 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் மற்றும் பொருள் சேதம் குறித்து உறுதியான தகவல் வெளியாகவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்