மேற்கு வங்க சட்டவிரோத பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து; 5 பேர் பலி

படுகாயமடைந்த பலர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.;

Update:2023-08-27 13:22 IST

கொல்கத்தா,

மேற்கு வங்காளம் மாநிலத்தின் துத்தாபுகூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக இருந்த பட்டாசு ஆலையில் இன்று தீப்பற்றியது. இதனால் பட்டாசுகள் வெடித்து சிதறின. இந்த தீவிபத்தினால் பட்டாசு ஆலை முழுவதும் இடிந்து தரைமட்டமாகியது.

காலை 10 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் 5 பேர் பலியாகி உள்ளனர். படுகாயமடைந்த பலர் பராசத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அதில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

தற்போது மீட்புப்படையினர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்