நடுவானில் விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறக்க முயன்ற பயணியால் பரபரப்பு

விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறக்க முயன்ற பயணியால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-09-21 17:05 GMT

கவுகாத்தி,

அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து திரிபுரா மாநிலம் அகர்தலாவிற்கு சென்று கொண்டிருந்த இண்டிகோ விமானத்தில், அவசர காலத்தில் பயன்படுத்தப்படும் எமர்ஜென்சி கதவின் அருகே அமர்ந்திருந்த பயணி ஒருவர் திடீரென அந்த கதவை திறக்க முயன்றுள்ளார்.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சக பயணிகள் அவரை தடுத்து நிறுத்த முயன்றுள்ளனர். தொடர்ந்து விமான பணிப்பெண்கள் விரைந்து வந்து அந்த பயணியை அங்கிருந்து அப்புறப்படுத்தி வேறு இருக்கையில் அமர வைத்தனர். இந்த சம்பவத்தால் நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அகர்தலா விமான நிலையத்தில் தரையிறங்கியதும் சம்பந்தப்பட்ட பயணியை விமான நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அந்த நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவரது பெயர் பிஸ்வஜித் தேப்நாத் என்பதும், சம்பவத்தின் போது அவர் போதை மாத்திரைகளை உட்கொண்டிருந்ததும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தால் பயணிகளின் பாதுகாப்பிற்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படவில்லை என இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்