அண்ணாவின் இருமொழி கொள்கை தான் எங்களது கொள்கையும் - ஓ.பன்னீர் செல்வம்

அண்ணாவின் இருமொழி கொள்கை தான் எங்களது கொள்கையும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Update: 2019-09-16 12:17 GMT
திருச்சி,

திருச்சியில் செய்தியாளர்கள் சந்திப்பில் ஓ.பன்னீர் செல்வம் கூறியதாவது:-

அண்ணாவின் இருமொழி கொள்கை தான் எங்களது கொள்கையும். இருமொழிக் கொள்கை என்பது தான் தமிழக அரசின் உயிர்நாடி, அதில் இருந்து பின்வாங்க மாட்டோம். ஏற்கனவே 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இருந்து பின்பு நீக்கப்பட்டது. தற்போது மாணவர்களின் கல்வித்திறன் மேம்படும் என்பதால் மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. நானும், முதலமைச்சர் பழனிசாமியும் நல்ல புரிதலோடு இருக்கிறோம், எங்களை பிரிக்க வேண்டும் என்கிற முயற்சி நடக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்