கொரோனா பாதிப்பு காரணமாக திமுக வட்டச் செயலாளர் உயிரிழப்பு

சென்னை பல்லாவரம் 37 வது வார்டு திமுக வட்டச் செயலாளர் எபனேசர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.

Update: 2020-07-08 10:58 GMT
சென்னை,

கொரோனா பாதிப்பு காராணமாக மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பொதுப்பணியில் உள்ளவர்கள் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதில் பலர் குணமடைந்து வீடு திரும்பி வந்தாலும், சில உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.

சென்னை பல்லாவரம் 37வது வார்டு திமுக வட்டச் செயலாளர் எபனேசர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார்.

முன்னதாக திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். மேலும், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பலருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது திமுக வட்டச் செயலாளர் உயிரிழந்துள்ளது திமுகவினரிடையே சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்