பவுர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே இன்று சிறப்பு ரெயில்கள் இயக்கம்

பவுர்ணமி கிரிவலத்தையொட்டி விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே இன்று சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

Update: 2024-05-23 02:01 GMT

விழுப்புரம்,

தென்னக ரெயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பவுர்ணமி கிரிவலத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி பக்தர்கள் வசதிக்காக தென்னக ரெயில்வே சிறப்பு ரெயிலை இயக்குகிறது.

அதன்படி விழுப்புரம் ரெயில் நிலையத்தில் இருந்து இன்று (வியாழக்கிழமை) காலை 9.15 மணிக்கு புறப்படும் விழுப்புரம்- திருவண்ணாமலை சிறப்பு ரெயில் (வண்டி எண் 06130) காலை 11 மணிக்கு திருவண்ணாமலைக்கு சென்றடையும்.

மறுமார்க்கத்தில் பகல் 12.40 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்படும் திருவண்ணாமலை-விழுப்புரம் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06129) விழுப்புரத்துக்கு பிற்பகல் 2.15 மணிக்கு வந்தடையும். இந்த ரெயில்கள் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், அண்டம்பள்ளம், தண்டரை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்றுசெல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்