தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க. - வி.சி.க. இடையே இன்று 2-ம் கட்ட பேச்சுவார்த்தை

இன்று மாலை தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் தொகுதி அடையாளம் காணப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளது.

Update: 2024-02-28 04:43 GMT

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் தி.மு.க. முனைப்பு காட்டி வருகிறது. இந்த நிலையில் தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க. - வி.சி.க. இடையே இன்று 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

வி.சி.க. 4 தொகுதிகளை ஒதுக்க தி.மு.க.விடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது. மேலும், 4 தொகுதிகளில் ஒரு தொகுதி பொது தொகுதியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி கேட்கிறது. சிதம்பரம் தொகுதியில்தான் போட்டியிடுவேன் என திருமாவளவன் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்று மாலை தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் தொகுதி அடையாளம் காணப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Tags:    

மேலும் செய்திகள்