புதுமை பெண் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு தலா ரூ.1,000 வழங்கல்

புதுமை பெண் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு தலா ரூ.1,000 வழங்கப்பட்டது.

Update: 2022-09-05 17:51 GMT

தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் அரசு பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி படித்து வரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் தலா ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டமான புதுமை பெண் திட்டம் தொடக்க விழா நடைபெற்றது. அரியலூர் மாவட்டம், வாலாஜாநகரத்தில் புதுமை பெண் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 740 மாணவிகளுக்கு தலா ரூ.1,000 உதவித்தொகை செலுத்தப்பட்ட வங்கி கணக்கு அட்டைகளை கலெக்டர் ரமணசரஸ்வதி எம்.எல்.ஏ.க்கள் கு.சின்னப்பா, க.சொ.க.கண்ணன் ஆகியோர் முன்னிலையில் வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்