ஆலங்குளம்,
ஆலங்குளம் அருகே உள்ள சுண்டங்குளம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பால், தயிர், நெய் உள்பட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.