நடைபயிற்சி சென்றபோது பெண்ணின் மீது முட்டையை வீசி நகை பறிப்பு

சென்னையில் நடைபயிற்சி சென்றபோது பெண்ணின் மீது முட்டையை வீசி நகை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2023-02-21 04:12 GMT

சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தை சேர்ந்தவர் கவிதா (வயது 58). இவர், நேற்று காலை வீட்டின் அருகே நடைபயிற்சி செய்துகொண்டிருந்தார். அப்போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் 2 பேர், கவிதா மீது கோழி முட்டையை வீசினார். இதில் அவர் நிலைதடுமாறினார். அப்போது மர்மநபர்கள் கவிதா கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தாலி சங்கிலியை பறித்துச்சென்று விட்டனர்.

இது குறித்து சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் இதேபோல் பெரம்பூர் மதுரை சாமி மடம் தெருவைச் சேர்ந்தவர் பத்மநாபன். இவருடைய மனைவி துர்கா தேவி (31). நேற்று முன்தினம் இரவு கணவன்-மனைவி இருவரும் மின்ட் பெரம்பூர் வடக்கு நெடுஞ்சாலை பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள், துர்கா தேவி கழுத்தில் இருந்த 3 பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்றனர். இதுபற்றி செம்பியம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்