ஆசிய ஆண்கள் 5 பேர் ஆக்கி: மலேசியாவை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்..!

நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் மோத உள்ளது.

Update: 2023-09-02 10:16 GMT

சலாலா,

அடுத்த ஆண்டு நடைபெறும் முதலாவது 5 பேர் ஆக்கி உலகக்கோப்பை தொடருக்கு தகுதி சுற்றான ஆசிய மண்டல ஆண்கள் தொடர் ஓமன் நாட்டின் சலாலா நகரில் செவ்வாய்கிழமை தொடங்கியது.

இதன் லீக் சுற்று முடிவில் இந்திய அணி 5 போட்டிகளில் 4 வெற்றி, 1 தோல்வி உடன் அரையிறுதிக்கு முன்னேறியது. அதன்படி இன்று நடைபெற்ற அரையிறுதியில் இந்திய அணி மலேசியாவுடன் மோதியது. இந்த போட்டியில் இந்திய அணி 10-4 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அடுத்த ஆண்டு நடைபெறும் முதலாவது 5 பேர் ஆக்கி உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்