நடிகர் மணிகண்டனை பாராட்டிய சிபி சத்யராஜ்

குடும்பஸ்தன் படம் பார்க்கும்போது கோயம்புத்தூர் பாஷை என்பதை எல்லாம் தாண்டி அந்தக் கதாபாத்திரத்தை மணிகண்டன் பண்ணின அளவுக்கு வேறு யாரும் பண்ணி இருக்க முடியாது என்று நடிகர் சிபி ராஜ் கூறியுள்ளார்.;

Update:2025-04-13 22:01 IST

சென்னை,

தமிழ் சினிமாவில் 'ஜெய் பீம், லவ்வர், குட் நைட்' போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் மணிகண்டன். இவரது நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் 24-ந் தேதி வெளியான படம் 'குடும்பஸ்தன்'. இப்படத்தை சினிமாக்காரன் நிறுவனம் தயாரிப்பில் நக்கலைட்ஸ் யூடியூப் இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் மணிகண்டன் உடன் இணைந்து சான்வி மேக்னா, குரு சோமசுந்தரம், ஆர் சுந்தர்ராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு வைஷாக் இசையமைத்துள்ளார்.

மக்களால் கொண்டாடப்பட்டு மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ள குடும்பஸ்தன் திரைப்படம் 75வது நாளை கடந்து வெற்றிநடை போட்டு வருகிறது.. இப்படம் உலக அளவில் சுமார் ரூ.30 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படம் ஜீ5 ஓ.டி.டி தளத்தில் வெளியானது.

இப்படத்தின் கதையை முதலில் கேட்டது நடிகர் அசோக் செல்வன் தான், ஆனால் அவருக்கு கால்ஷீட் இல்லாத காரணத்தினால், இப்படத்தில் மணிகண்டனை நடிக்க சிபாரிசு செய்தார்.இந்த நிலையில், குடும்பஸ்தன் திரைப்படத்தை அசோக் செல்வன் மட்டுமல்ல வேறொரு நடிகரும் மிஸ் செய்துள்ளார். அவர் வேறு யாருமில்லை நடிகர் சிபி சத்யராஜ்

இதுகுறித்து அவரே சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார். இதில் "சமீபத்தில் குடும்பஸ்தன் படம் பார்த்தேன். அந்தக் கதை எனக்கும் வந்தது. சில காரணங்களால் அந்தப் படம் மிஸ் ஆயிடுச்சு. ஆனா, அந்த படம் பார்க்கும்போது, கோயம்புத்தூர் பாஷை என்பதை எல்லாம் தாண்டி, அந்த கதாபாத்திரத்தை மணிகண்டன் பண்ண அளவுக்கு வேற யாரும் பண்ணியிருக்க முடியாது. எனக்கு படம் பார்க்கும் போது, அவங்க பேசுற பாஷை எல்லாம் எனக்கு ஊருக்கு போயிட்டு வந்த ஒரு பீல் இருந்தது" என கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்