தொடர் விடுமுறை: சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு - தெற்கு ரெயில்வே

தாம்பரம், போத்தனூர், கொல்லம், சென்னைக்கு சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.;

Update:2025-04-10 08:01 IST

சென்னை,

தொடர் விடுமுறையை முன்னிட்டு கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தெற்கு ரெயில்வே சிறப்பு ரெயில்களை அறிவித்துள்ளது.

அதன்படி, தாம்பரம் - போத்தனூர்:

தாம்பரம் - போத்தனூர் செல்லும் வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 06185) வருகிற ஏப்ரம் மாதம் 11, 18, 25, மற்றும் மே 2, 2025 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். இந்த ரெயில் தாம்பரத்தில் இருந்து (வெள்ளிக்கிழமை) மாலை 5.05 மணியில் புறப்படும்.

மறுமார்க்கத்தில் போத்தனூர் - தாம்பரம் செல்லும் வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 06186) வருகிற ஏப்ரல் மாதத்தில் 13, 20, 27, மற்றும் மே 4, 2025 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். இந்த ரெயில் போத்தனூரில் (ஞாயிற்றுக்கிழமை) இருந்து 11.55 மணியளவில் புறப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

ரெயில் பெட்டி அமைப்பு: 1- ஏசி இரண்டு அடுக்கு பெட்டி, 3- ஏசி மூன்று அடுக்கு பெட்டிகள், 12-ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள், 2- பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் மற்றும் 2- இரண்டாம் வகுப்பு பெட்டிகள் உள்ளன.

சென்னை- கொல்லம்:

சென்னை- கொல்லம் செல்லும் வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 06113) வருகிற ஏப்ரம் மாதம் 12, மற்றும் 19, 2025 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். இந்த ரெயில் சென்னையில் இருந்து (சனிக்கிழமை) இரவு 11.20 மணியில் புறப்படும்.

மறுமார்க்கத்தில் கொல்லம் - சென்னை செல்லும் வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 06114) வருகிற ஏப்ரல் மாதத்தில் 13 மற்றும் 20, 2025 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். இந்த ரெயில் கொல்லத்தில் (ஞாயிற்றுக்கிழமை) இருந்து 11.55 மணியளவில் புறப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

ரெயில் பெட்டி அமைப்பு: 12- ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள், 6 பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள், மற்றும் 2- இரண்டாம் வகுப்பு பெட்டிகள் உள்ளன.

சென்னை - போத்தனூர்:

சென்னை - போத்தனூர் செல்லும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 06027) வருகிற ஏப்ரம் மாதம் 11ம் தேதியில் இயக்கப்படும். இந்த ரெயில் சென்னையில் இருந்து (வெள்ளிக்கிழமை) இரவு 11.50 மணியில் புறப்படும்.

மறுமார்க்கத்தில் போத்தனூர் - சென்னை செல்லும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 06028) வருகிற ஏப்ரல் மாதம் 14ம் தேதி இயக்கப்படும். இந்த ரெயில் போத்தனூரில் (திங்கட்கிழமை) இருந்து இரவு 11.30 மணியளவில் புறப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

ரெயில் பெட்டி அமைப்பு: 11- ஏசி மூன்று அடுக்கு பெட்டிகள், 7-ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள், 2- பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் மற்றும் 2- லக்கேஜ் கம் பிரேக் வேன்கள் உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்