பதற்றம் வேண்டாம்... மரண பயம் கண்ணில் தெரிகிறது: மு.க.ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் பதிலடி

கேடு கெட்ட ஆட்சியை இந்த கூட்டணிதான் வேரறுக்கப் போகிறது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.;

Update:2025-04-13 13:08 IST

சென்னை,

பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

நம்மைப் பார்த்து "பொருந்தாக் கூட்டணி" என்கிறார்களாம் சில திமுக ஏஜென்ட்டுகள்.. ஆம்! இது திமுகவுக்கு பொருந்தாக் கூட்டணிதான். ஏனென்றால், இந்த கூட்டணிதான் மக்களை சுரண்டிக் கொழுக்கும் மு.க.ஸ்டாலினின் அவல ஆட்சியை வீட்டிற்கு அனுப்பப் போகிறது.

இந்த கூட்டணிதான் தமிழக பெண்களின் மாண்பை கழுவிலேற்றிய கயவர்களை அமைச்சர்களாகக் கொண்ட ஒரு கேடு கெட்ட ஆட்சியை வேரறுக்கப் போகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே! இந்த கூட்டணிதான் மக்களோடு மக்களாக நின்று உங்கள் கூடாரத்தையே விரட்டியடிக்கப் போகிறது.

இந்த உண்மை உங்களுக்கும் தெரிந்திருப்பதால் மரண பயம் கண்ணில் தெரிகிறது போலும்.. பதற்றம் வேண்டாம், ஐயா ஸ்டாலின் அவர்களே. இன்னும் ஒரு வருட காலமிருக்கிறது. அதுவரை ஆடுங்கள்! ஆனால், மக்கள் வாயிலாக மகேசன் உங்களுக்கு அளிக்க உள்ள தீர்ப்பினை யாராலும் மாற்ற முடியாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்