தூத்துக்குடியில் கோவில் பூசாரி வெட்டிக் கொலை: இளஞ்சிறார் கைது

தாளமுத்துநகர் பகுதியைச் சேர்ந்த ஒரு கோவில் பூசாரிக்கும் தூத்துக்குடியைச் சேர்ந்த 17 வயது இளஞ்சிறார் ஒருவருக்கும் இடையே ஏற்கெனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.;

Update:2025-08-08 10:48 IST

தூத்துக்குடி, தாளமுத்துநகர், ஏ.சண்முகபுரம், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த மூக்காண்டி மகன் ரவி (வயது 38). இவர் தூத்துக்குடி 3வது மைல் பகுதியில் உள்ள பேச்சியம்மன் கோவிலில் பூசாரியாக உள்ளார். குடும்ப கருத்து வேறுபாடு காரணமாக இவர் தனது மனைவி குழந்தைகளை பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் மங்களக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மனைவி விஜயா என்பவர் கணவரை பிரிந்து, ரவியுடன் பழக்கம் ஏற்பட்டு கடந்த 5 வருடங்களாக இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு ரவி கோவிலில் பூஜை முடித்துவிட்டு இரவு 10 மணியளவில் தாளமுத்துநகருக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். ஏ.சண்முகபுரம் சேதுபாதைரோடு பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே செல்லும்போது 2 பேர் அவரை வழிமறித்து சரமரியாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி நகர உட்கோட்ட ஏஎஸ்பி மதன் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார். இதனையடுத்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் ரவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுெதாடர்பாக தூத்துக்குடி நகர உட்கோட்ட ஏஎஸ்பி மதன் மேற்பார்வையில், தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருளப்பன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் ரவிக்கும் தூத்துக்குடியைச் சேர்ந்த 17 வயதுடைய இளஞ்சிறார் ஒருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளதும், அந்த முன் விரோதத்தினால் இளஞ்சிறார் மற்றொரு நபருடன் ேசர்ந்து சம்பவ இடத்தில் வைத்து வாளால் வெட்டி கொலை செய்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து அந்த இளஞ்சிறாரை கைது செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்