இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 17-12-2024

Update:2024-12-17 09:08 IST
Live Updates - Page 2
2024-12-17 11:31 GMT

நகரத் தொடங்கிய உலகின் பழமையான பனிப்பாறை

1986-ல் அண்டார்டிக்காவில் இருந்து பிரிந்த உலகின் மிகப்பெரிய பனிப்பாறையான ஏ23ஏ மீண்டும் நகரத்தொடங்கி உள்ளதாக ஆய்வாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். சுமார் 1 ட்ரில்லியன் எடை கொண்ட இது. லண்டன் நகரத்தை விட 2 மடங்கு பெரியது. இது பல மாதங்களாக நகராமல் ஒரே இடத்தில் இருந்த நிலையில் தற்போது தெற்கு ஜார்ஜியா நோக்கி நகர்ந்து செல்கிறது.

2024-12-17 11:15 GMT

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே செவல்பட்டியில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 அறைகள் தரைமட்டமாகின. நல்வாய்ப்பாக தொழிலாளர்களுக்கு எந்த காயமும் இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.

2024-12-17 11:03 GMT

கடலில் காற்றின் வேகம் அதிகரித்த நிலையில் புதுக்கோட்டை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவித்துள்ளது.

2024-12-17 10:41 GMT

நாட்டில் வேலைவாய்ப்பின்மை 3.2 சதவீதம் ஆக குறைந்துள்ளது. 2017-18-ல் 6 சதவீதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை விகிதம் தற்போது 3.2 சதவீதமாக உள்ளதாக மக்களவையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தகவல் தெரிவித்துள்ளார். 

2024-12-17 10:39 GMT

தடையை மீறி திருவண்ணாமலை தீப மலையில் ஏறி வழி தெரியாமல் சிக்கி தவித்த பெண்ணை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

2024-12-17 10:35 GMT

சென்னை வேளச்சேரியில் தாறுமாறாக ஓடிய கார் மோதியதில் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காரை ஓட்டி வந்த திருவொற்றியூரை சேர்ந்த பிரகதீஷ் (வயது 29) கைது செய்யப்பட்டுள்ளார். காயமடைந்தவர்கள் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

2024-12-17 10:32 GMT

கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் சிபிஐ விசாரணைக்கு தடை கேட்டு தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. சென்னை ஐகோர்ட்டு உத்தரவில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

2024-12-17 10:27 GMT

விழுப்புரத்தில் 17 நாட்களாகியும் சுமார் 4 அடிக்கு மேல் மழை நீருடன் கழிவு நீர் கலந்து நிற்கிறது. குடியிருப்புகளை சூழ்ந்துள்ள வெள்ள நீரால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். மழை நீரை உடனடியாக அகற்றவேண்டும் என்று அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

2024-12-17 10:23 GMT

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’மசோதா குறித்து காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி கூறுகையில், அரசியலமைப்புக்கு எதிரான மசோதா. இது நமது நாட்டின் கூட்டாட்சிக்கு எதிரானது. நாங்கள் மசோதாவை எதிர்க்கிறோம் என்றார். 

2024-12-17 10:19 GMT

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’மசோதா மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டதற்கு 269 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 198 பேர் மசோதா அறிமுகத்திற்கு எதிராக வாக்களித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்