ஐ.பி.எல். ஏலம்: சிஎஸ்கே அணி இந்த 2 வீரர்களை குறி வைக்கலாம் - அஸ்வின் கணிப்பு
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்க வாய்ப்புள்ள வீரர்கள் குறித்து பல முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். அந்த வரிசையில் இந்தியா மற்றும் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வினும் இந்த ஆண்டு மினி ஏலத்தில் எந்தெந்த வீரர்களை சி.எஸ்.கே நிர்வாகம் வாங்க வாய்ப்புள்ளது என்பது குறித்த தனது கணிப்பினை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?
இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.20-ம், சவரனுக்கு ரூ.160-ம் குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,000-க்கும், சவரன் ரூ.96,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
’மாமதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா அல்லது... ’- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மாமதுரைக்கு தேவை வள்ளர்ச்சி அரசியலா அல்லது....... அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் வழக்கு: மதுரை கலெக்டர், மாநகர காவல் ஆணையர் இன்று ஆஜர்
திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், மதுரை கலெக்டர் மற்றும் மாநகர காவல் ஆணையர் இன்று காலை 10.30 மணிக்கு ஆஜராக உள்ளனர். ஐகோர்ட்டு மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு வழக்கு விசாரணைக்கு வருகிறது;
மலை உச்சியில் தீபம் ஏற்ற உத்தரவிட்டும் அதனை அமல்படுத்தவில்லை என நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரபட்டிருந்தது. இதனிடையே வழக்கத்திற்கு மாறாக மலை உச்சியில் தீபம் ஏற்ற உத்தரவிட்டதை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் இன்று விசாரணை நடைபெறுகிறது.
இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் 2-வது டெஸ்டில் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
4-வது நாளாக தொடரும் குளறுபடி: இண்டிகோ விமானங்கள் ரத்தால் பரிதவிக்கும் பயணிகள்
சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில் 550-க்கும் மேற்பட்ட விமானங்களை இண்டிகோ நிறுவனம் ரத்து செய்தது.
நூற்றாண்டு கனவு நோக்கி நம் இயக்கம் பீடுநடை போடுவதற்கு அடித்தளமிட்ட தன்னிகரற்ற ஆளுமை ஜெயலலிதா என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
திருப்பரங்குன்றம் விவகாரம்: நயினார் நாகேந்திரன் உள்பட 113 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு
திருப்பரங்குன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதா தலைவர் நயினார் நாகேந்திரன் உள்பட 500 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பரங்குன்றம் விவகாரம்: நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக் கோரி திமுக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்
நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக் கோரி திமுக சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
"மக்களால் நான்.. மக்களுக்காக நான்".. ஜெயலலிதா எனும் பெண் ஆளுமை! - இன்று 9-வது நினைவு தினம்
"மக்களால் நான்.. மக்களுக்காக நான்" என்ற கர்ஜனை குரலுக்கு சொந்தக்காரர், ஜெயலலிதா. அவர் இந்த மண்ணைவிட்டு மறைந்து இன்றோடு 9 ஆண்டுகள் ஆனாலும், அ.தி.மு.க. தொண்டர்களால் என்றென்றும் போற்றப்பட்டு வருகிறார்.