இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 09-12-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;

Update:2025-12-09 10:15 IST


Live Updates
2025-12-09 13:51 GMT

வந்தே மாதரம் பாடலின் வரிகளை துண்டாடிய நேரு - அமித் ஷா குற்றச்சாட்டு 


வந்தே மாதரம் பாடல் வரிகளை நேரு துண்டாடாமல் இருந்திருந்தால் நாட்டில் பிரிவினை ஏற்பட்டிருக்காது என அமித் ஷா தெரிவித்தார்.

2025-12-09 13:16 GMT

முதல் டி20 போட்டி: இந்தியாவுக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சு தேர்வு

இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

2025-12-09 12:40 GMT

தவெக தலைவர் விஜய்யின் ஈரோடு மக்கள் சந்திப்பு தேதி மாற்றம், டிச. 16ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் டிச.18-ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காவல் துறை விதித்துள்ள 84 நிபந்தனைகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளதால் டிச. 18ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 

2025-12-09 12:33 GMT

அனில் அம்பானியை தொடர்ந்து அவரது மகன் ஜெய் அன்மோலுக்கு எதிராகவும் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. ரூ.228 கோடி வங்கி முறைகேடு புகார் தொடர்பாக அனில் அம்பானியின் மகன் ஜெய் அன்மோலுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தது சிபிஐ.

2025-12-09 12:32 GMT

தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல் 


தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025-12-09 12:30 GMT

"`'எஸ்.ஐ.ஆர்' கணக்கீட்டு படிவங்களை சமர்பிப்பதில் சிக்கல் உள்ளதால் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்" என சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசியல் கட்சிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. `எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையை எதிர்த்த திமுக உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் மீதான விசாரணை நாளை மறுதினம் ஒத்திவைக்கப்பட்டது.

2025-12-09 11:43 GMT

எஸ்.ஐ.ஆர்.பணிகளை உடனே நிறுத்த வேண்டும்; மக்களவையில் ராகுல் காந்தி வலியுறுத்தல் 


எஸ்.ஐ.ஆர் குறித்து பேசாமல் விவாதத்தை ராகுல் காந்தி திசை திரும்புவதாக மத்திய மந்திரி கிரண் ரிஜ்ஜு குற்றம்சாட்டினார். தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து பேசுமாறு ராகுல் காந்திக்கு மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லா அறிவுரை வழங்கினார்.

அதனை தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, எஸ்.ஐ.ஆர் குறித்துதான் பேச வருகிறேன். அதற்குள் குறுக்கிடாதீர்கள்.எஸ்.ஐ.ஆர்.பணிகளை உடனே நிறுத்த வேண்டும்.பாஜக அரசு எல்லாவற்றையும் பேச மட்டுமே செய்கிறது. ஆனால் செயலில் ஒன்றுமில்லை. நான் சொல்லக் கூடியது கசப்பான உண்மைகள்; எதிரணியில் இருக்கும் ஆளுங்கட்சியினரால் நிச்சயமாக ஏற்க முடியாது என்றார்.

2025-12-09 11:42 GMT

“மக்கள் சந்திப்பை, பிரசார முன்னெடுப்புகளை தி.மு.க. அரசு தடுக்கப் பார்த்தால்..” - விஜய் பரபரப்பு பதிவு 


புதிய அரசியல் அத்தியாயத்தை தொடங்கி உள்ளதாக தவெக தலைவர் விஜய் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

2025-12-09 11:41 GMT

நாடாளுமன்ற மாநிலங்களவையில் திருச்சி சிவா - மத்திய மந்திரி எல்.முருகன் வாக்குவாதம் 


நாட்டுக்காக போராடியவர்களை தி.மு.க. அடையாளம் காட்ட தவறியதில்லை என்று தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா கூறினார்.

2025-12-09 11:10 GMT

புதுச்சேரியில் பேசிய விஜய்.. டீக்கடையில் அமர்ந்து செல்போனில் ரசித்து கேட்ட முதல்-அமைச்சர் ரங்கசாமி 


புதுச்சேரியில் மாநில அந்தஸ்து பெற்றால் மட்டும் போதாது தொழில் வளர்ச்சியும் வேண்டும் என்று குறிப்பிட்ட விஜய் இந்தியாவிலேயே ரேஷன் கடை இல்லாத ஒரே மாநிலம் புதுச்சேரி தான் என்று சுட்டி கட்டினார். 

Tags:    

மேலும் செய்திகள்