நாடாளுமன்ற தேர்தல்: 3-ம் கட்ட தேர்தலில் 1,351 பேர் போட்டி

குஜராத் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 96 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்க உள்ளது.

Update: 2024-04-23 22:19 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு கடந்த 19-ந் தேதி தமிழகம் உள்ளிட்ட இடங்களில் நடந்தது. 2-ம் கட்ட தேர்தல் வரும் 26-ந் தேதி நடைபெற உள்ளது. அடுத்தகட்டமாக 3-ம் கட்ட தேர்தல் வரும் மே 7-ந் தேதி நடக்க இருக்கிறது. குஜராத் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 96 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்க உள்ளது.

இந்த தொகுதிகளுக்கான வேட்புமனு வாபஸ் நேற்றுடன் முடிந்தது. 96 இடங்களுக்கு போட்டியிட 2 ஆயிரத்து 963 பேர் மனு செய்து இருந்தனர். வேட்பு மனு பரிசீலனைக்கு பின்பு 1,563 மனுக்கள் தகுதியானதாக ஏற்கப்பட்டது. வேட்புமனு வாபஸ் பெறப்பட்ட பின்பு, இறுதி வேட்பாளர்கள் பட்டியலை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. 3-ம் கட்ட தேர்தலில் மொத்தம் 1,351 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக அறிவித்து உள்ளது.

இதில் மத்திய பிரதேசத்தின் பெதுல் தொகுதியில் போட்டியிடும் 8 வேட்பாளர்களும் அடக்கம். அங்கு 2-ம்கட்ட தேர்தல் நடைபெற இருந்த நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் இறந்துபோனதால், அந்த தொகுதிக்கு 3-ம் கட்ட தேர்தலுடன் சேர்த்து வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது.

அதிகபட்சமாக குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கு 658 பேர் போட்டியிடுகிறார்கள். மராட்டியத்தில் 11 இடங்களுக்கு 519 பேர் போட்டியிடுகிறார்கள். மராட்டியத்தின் உஸ்மான்பாத் தொகுதியில் அதிகபட்சமாக 77 பேர் போட்டியிடுகிறார்கள். அதற்கடுத்தபடியாக சத்தீஷ்காரின் பிலாஸ்பூர் தொகுதியில் 68 பேர் போட்டியிடுகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்