கடகம் - ஆனி தமிழ் மாத ஜோதிடம்


கடகம் - ஆனி தமிழ் மாத ஜோதிடம்
x
தினத்தந்தி 15 Jun 2023 6:45 PM GMT (Updated: 16 Jun 2023 8:36 AM GMT)

ஆனி மாத ராசி பலன்கள் 16-06-2023 முதல் 16-07-2023 வரை

நட்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கடக ராசி நேயர்களே!

ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் செவ்வாய் உங்கள் ராசியிலேயே நீச்சம்பெற்று சஞ்சரிக்கிறார். ஆனி 17-ந் தேதிக்கு மேல் சிம்மத்திற்கு செல்கிறார். மாதத் தொடக்கத்தில் வலிமை செய்யும் கிரகம் வலிமை இழந்திருப்பதால் மனநிம்மதிக் குறைவு உருவாகும். சுக ஸ்தானத்தில் கேது இருப்பதாலும், மாதம் முழுவதும் செவ்வாயின் பார்வை சனியின் மீது பதிவதாலும் உடல்நலத்தில் கவனம் தேவை.

மிதுன - புதன்

ஆனி 3-ந் தேதி, மிதுன ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு விரயாதிபதியான புதன், விரய ஸ்தானத்தில் தனாதிபதி சூரியனோடு இணைவதால் தன விரயங்கள் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடி செய்ய பெரும் பிரயாசை எடுக்கும் சூழ்நிலை உருவாகும். பயணங்கள் அதிகரிக்கும். பழைய வாகனத்தை கொடுத்து விட்டு புதிய வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். என்றாலும் நினைத்த துறை கிடைக்காமல் வேறு துறை கிடைக்கலாம்.

சிம்ம - செவ்வாய்

ஆனி 17-ந் தேதி, சிம்ம ராசிக்கு செவ்வாய் செல்கிறார். குருவின் பார்வை செவ்வாய் மீது பதிவதால் 'குரு மங்கல யோகம்' ஏற்படுகிறது. உடன்பிறப்புகள் வழியில் சுபச்செய்திகள் வந்துசேரும். குருவின் பார்வை பதிந்த செவ்வாயின் பார்வை, சனியின் மீது விழுகிறது. எனவே கடுமையான சூழ்நிலை கொஞ்சம் மாறும். கொடுக்கல் - வாங்கல்களில் சரளமான நிலை உருவாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டு.

சிம்ம - சுக்ரன்

ஆனி 18-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் வருகிறார். உங்கள் ராசிக்கு சுக- லாபாதிபதியான சுக்ரன், தன ஸ்தானத்திற்கு வருவது யோகம்தான். குடும்ப முன்னேற்றம் கூடும். தொழிலில் கூடுதல் லாபம் கிடைக்கும். கடுமையாக முயற்சித்தும் நடைபெறாத காரியங்கள் இப்பொழுது துரிதமாக நடைபெறும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. சிம்மத்தில் உள்ள செவ்வாயின் மீது குருவின் பார்வை பதிவதால், உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வுடன் கூடிய இடமாற்றம் வரலாம்.

கடக - புதன்

ஆனி 19-ந் தேதி, கடக ராசிக்கு புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், சொந்த வீட்டிலேயே சஞ்சரிப்பதால் சகோதர உறவு பலப்படும். வழக்குகள் சாதகமாக முடியும். வருங்கால நலன் கருதி நீங்கள் எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். ஒரு சிலருக்கு தூர தேசப் பயணங்கள் கைகூடும். புனிதப் பயணங்களை மேற்கொள்வீர்கள். அண்ணன்-தம்பிகளுக்குள் இருந்த அரசல் புரசல்கள் மாறும். உத்தியோகத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேர வாய்ப்பு உருவாகும்.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகளும், அதனால் பிரபலமாகும் யோகமும் உண்டு. வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சகப் பணியாளர்களால் நன்மை உண்டு. உயர் அதிகாரிகளால் மதிக்கப்படுவீர்கள். கலைஞர்களுக்கு புதிய நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம். மாணவ- மாணவி கள், தங்களுடன் பயிலும் சக மாணவர்களிடம் பழகும் பொழுது கவனம் தேவை. பெண்களுக்கு மனம் மகிழும் காரியங்கள் நடைபெறும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பிள்ளைகளின் எதிர்கால நலனில் அக்கறை செலுத்துவீர்கள்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜூன்: 16, 17, 24, 25, 29, 30, ஜூலை: 9, 10, 14, 15.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தாநீலம்.

Live Updates

  • சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு
    14 Jun 2023 5:16 AM GMT

    சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு

    தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய இடங்கள், அவரின் சகோதரர் வீடுகள் மற்றும் உறவினர்கள் வீடு உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த மாதம் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.

    அதன் அடிப்படையில் சென்னையில் பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லம் மற்றும் தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறை, கரூரில் உள்ள செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையானது சுமார் 18 மணிநேரம் நீடித்து வந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர்.

    அப்போது, அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் அமைச்சர் செந்தில்பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டிருக்கும் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.


Next Story