சட்டப்பிரிவு 370 - தற்காலிகமானதுதான் என்ற முடிவுக்கு வருகிறோம் - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி


சட்டப்பிரிவு 370  - தற்காலிகமானதுதான் என்ற முடிவுக்கு வருகிறோம் - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி
x
தினத்தந்தி 11 Dec 2023 5:32 AM GMT (Updated: 11 Dec 2023 6:43 AM GMT)

370- பிரிவை ரத்து செய்ததையும், ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்ததையும் எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு இன்று வழங்கியது.

புதுடெல்லி,

கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5 அன்று, ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பின் 370 வது பிரிவை மத்திய அரசு ரத்து செய்தது. மேலும் அந்த மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது.

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மாநிலங்களவையில் இந்த அறிவிப்பை ஜம்மு காஷ்மீர் சட்டசபை ஒப்புதல் இன்றி வெளியிட்டார்.

இதைத்தொடர்ந்து, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததை தொடர்ந்து மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு பொது நலவழக்குகள் தொடரப்பட்டன. சுப்ரீம் கோர்ட்டின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த ஆகஸ்ட் 2, 2023 முதல் ஜம்மு மற்றும் காஷ்மீரில் இருந்து 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை விசாரிக்கத் தொடங்கியது.

இந்த வழக்கை 16 நாட்கள் விசாரணைக்குப் பிறகு செப்டம்பர் 5-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை ஒத்திவைத்தது. இந்நிலையில், 370- பிரிவை ரத்து செய்ததையும், ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்ததையும் எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு இன்று வழங்கியது. மூன்று விதமான தீர்ப்புகளை நீதிபதிகள் அளித்தனர். முதலில், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கூறியதன் விவரம் வருமாறு:

*சட்டப்பிரிவு 370 தற்காலிகமானதா என்பது குறித்து ஆராயப்படும்.

*ஜனாதிபதி ஆட்சியின்போது மாநிலங்களில் மத்திய அரசால் அமல்படுத்தப்படும் ஒவ்வொரு முடிவையும் கேள்வி கேட்க முடியாது.

*அவசர சட்டம் என்பது ஒரு குறிப்பிட்ட ஆயுளையே கொண்டது

என்றார்.


Next Story