
பிரதமர் மோடியின் குவைத் பயணத்தின் ஒரு பகுதியாக, இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களை சந்தித்து அவர் பேசினார். அப்போது அவர்கள் கைகளில் இந்திய தேசிய கொடியுடன் பிரதமரை வரவேற்றனர். அவர்கள் பிரதமருக்கு இருகைகளை கூப்பி வணக்கம் தெரிவித்தனர். கடந்த 1981-ம் ஆண்டு கடைசியாக முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி குவைத்துக்கு பயணம் மேற்கொண்டார். அவருக்கு அடுத்து பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்த பயணத்தில், ராணுவம் மற்றும் பாதுகாப்பில் ஒத்துழைப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதில் முக்கிய கவனம் செலுத்தப்படும் என இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





