
பொங்கல் பண்டிகைக்கு 14-ந்தேதி முதல் 6 நாட்கள் தொடர் விடுமுறை; தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை 14-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ஏற்கனவே 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், 17-ந்தேதியும் விடுமுறை அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதனால், பொங்கல் பண்டிகையை கொண்டாட 6 நாட்கள் தொடர் விடுமுறையை தமிழக அரசு அறிவித்து உள்ளது.
இதன்படி, அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளுக்கு, கல்வி நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஜனவரி 17-ந்தேதியும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், ஜனவரி 14-ந்தேதி முதல் 19-ந்தேதி வரையிலான 6 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஜனவரி 25-ந்தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story






