வில்வித்தையில் இந்திய அணிக்கு பதக்கம் உறுதி

வில்வித்தையில் காம்பவுண்ட் பெண்கள் அணிகள் பிரிவின் அரையிறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவின் ஜோதி சுரேகா வென்னம், அதிதி மற்றும் பர்னீத் ஆகியோர் அடங்கிய அணி இந்தோனேசியாவின் ரைத் பத்லி, ஷியாகரா கோருனிசா மற்றும் ஸ்ரீ ரண்டி ஆகியோரை 233-219 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதன் மூலம் வில்வித்தை போட்டியில் இந்தியாவுக்கு குறைந்தபட்சம் வெள்ளி பதக்கமாவது கிடைப்பது உறுதியாகியுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





