சென்னை- பரங்கிப்பேட்டை இடையே புயல் கரையை கடக்க... ... வங்கக்கடலில் புயல் உருவாவதில் தாமதம்
x
Daily Thanthi 2024-11-27 07:18:09.0
t-max-icont-min-icon

சென்னை- பரங்கிப்பேட்டை இடையே புயல் கரையை கடக்க வாய்ப்பு - வெளியான தகவல்



சென்னையில் வரும் 29 மற்றும் 30-ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

காற்றழுத்த தாழ்வு மண்டலம்/புயல் நவம்பர் 30ம் தேதிக்குள் பரங்கிப்பேட்டை, கடலூர் மற்றும் சென்னை இடையே கரையை கடக்கக்கூடும்.

வரும் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் சென்னை பகுதியில் கனமழை பெய்யும். சென்னைக்கு தெற்கே காற்றழுத்தம் நகர்ந்து வருவதால், சென்னையின் நீர்ப்பிடிப்புக்கு ஏற்ற மழையாக இது அமையும்.

சென்னையில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. 

நாளை (28-ம் தேதி) - சென்னையில் நாளை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. 

நாளை மறுநாள் (29-ம் தேதி) சென்னையில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. 

30-ம் தேதி - சென்னையில் மிக கனமழை முதல் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது. 

நவம்பர் 1ம் தேதி - சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. 

நவம்பர் 2ம் தேதி - சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. 

காற்றழுத்த தாழ்வு நிலை / புயல் கரையை கடந்த பிறகு, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் கொங்கு மண்டலம் உள்ளிட்ட உள் மாவட்டங்கள் மழையை அனுபவிக்க முடியும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

1 More update

Next Story