காசியை வளர்த்ததில் தமிழர்களின் பங்கு அதிகம் - பிரதமர் மோடி பேச்சு


காசியை வளர்த்ததில் தமிழர்களின் பங்கு அதிகம் - பிரதமர் மோடி பேச்சு
x
Daily Thanthi 2022-11-19 10:18:26.0
t-max-icont-min-icon

வாரணாசி,

வணக்கம் காசி - வணக்கம் தமிழ்நாடு என தமிழில் கூறி உரையை தொடங்கினார் பிரதமர் மோடி.

நாடு பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றின் சங்கமமாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது. காசியும் தமிழ்நாடும் கலாசாரத்தில் சிறந்து விளங்குகிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கு இந்த சங்கமமே சாட்சி. காசிக்கும் தமிழ்நாட்டுக்கும் நீண்ட பந்தம் உள்ளது. காசியை போன்று தமிழ்நாடும் பழமை, கலசாரம் கொண்டது.

தமிழ்நாட்டின் பண்பாட்டை காட்டும் கோவில் காசியில் உள்ளது. காசிக்கு துளசிதாசர் என்றால் தமிழகத்திற்கு திருவள்ளூவர். காசியை வளர்த்ததில் தமிழர்களின் பங்கு அதிகமாக உள்ளது.

காசிக்கு துளசிதாசர் என்றால், தமிழகத்திற்கு திருவள்ளுவர். காசியும், தமிழ்நாடும் கலாச்சாரத்தில் சிறந்து விளங்குகிறது. காசி பட்டு போல, காஞ்சிபுரம் பட்டும் சிறப்பு வாய்ந்தது. தமிழக திருமணங்களில் காசியாத்திரை என்ற வழக்கம் உண்டு. காசியும் தமிழ்நாடும் திருக்கோவில்களுக்கு பெருமை பெற்றவை. இது போன்ற நிகழ்ச்சிகளால் தான் வேர்களை பாதுகாக்க முடியும் என்றார்.

1 More update

Next Story