மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-12-2024
x
Daily Thanthi 2024-12-16 09:53:25.0
t-max-icont-min-icon

மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண விருப்பம்.. மோடி முன்னிலையில் இலங்கை அதிபர் பேட்டி

இந்தியாவிற்கு வருகை தந்துள்ள இலங்கை அதிபராக அநுர குமார திசநாயக  இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின்னர் பிரதமர் மோடி, இலங்கை அதிபர் அநுர குமார இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது, அநுர குமார பேசும்போது, “இரு நாடுகளுக்கும் மிகப்பெரிய சிக்கலாக மாறியுள்ள மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர மற்றும் நிலையான தீர்வைக் காண விரும்புகிறோம். அந்த பகுதியில் உள்ள மீனவர்களால் இழுவை படகுகள் மூலம் மீன்பிடிக்கும் முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அது இத்தொழிலுக்கு அழிவை ஏற்படுத்தும் என்பதால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்றார்.

1 More update

Next Story