திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: அமைச்சர் சேகர்பாபு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சிலவரிகளில் 05-02-2025
x
Daily Thanthi 2025-02-05 05:31:42.0
t-max-icont-min-icon

திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, “திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் நேற்று நடந்தது தேவையற்ற போராட்டம். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இந்து அமைப்பினரே இல்லை. போராட்டம் என்ற பெயரில் பா.ஜ.க.வினர் திமுக ஆட்சிக்கு அபாயத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள்.

ஒரு பொறுப்புள்ள தலைவர் குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக முழக்கம் எழுப்பியது அழகல்ல. திருப்பரங்குன்றம் பிரச்சனை தேவையற்ற பிரச்சனை என்று அப்பகுதி மக்களே கருத்து சொல்கிறார்கள். வட மாநில​த்தைப் போல கலவரத்தை ஏற்படுத்த பா.ஜ.க.வினர் முயற்சிக்கிறார்கள், அது தமிழகத்தில் நடக்காது. தமிழகம் திராவிட மண்... இதுபோன்ற கலவர முயற்சியை அனுமதிக்காது. திருப்பரங்குன்றத்தில் இந்துக்களும், இஸ்லாமியர்களும் உறவினர்களைபோல் வாழ்ந்து வருகின்றனர்” என்று கூறினார்.

1 More update

Next Story