ஆந்திரா: சரக்கு ரெயில் தடம் புரண்டதால் ரெயில் சேவை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 29-08-2025
x
Daily Thanthi 2025-08-29 08:21:25.0
t-max-icont-min-icon

ஆந்திரா: சரக்கு ரெயில் தடம் புரண்டதால் ரெயில் சேவை பாதிப்பு

ஆந்திர மாநிலம் விஜயநகரம் ரெயில் நிலையம் அருகே சரக்கு ரெயில் தடம் புரண்டதால் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சரக்கு ரயில் தடம்புரண்ட இடத்தில் பெட்டிகளை அகற்றும் பணியில் ரெயில்வே அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

விஜயநகரம் சிக்னேச்சர் பாலத்தில் ஒரு சரக்கு ரெயில் தடம் புரண்டதால், ஐந்து பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து விலகிச் சென்றன. தடம்புரண்ட சரக்கு பெட்டிகள் அகற்றப்பட்டு, விரைவில் ரெயில் சேவை தொடங்கும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

விபத்து நடக்கும்போது மற்றொரு தண்டவாளத்தில் ரெயில்கள் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. விஜயநகரம் விசாகப்பட்டினம், விசாகப்பட்டினம் - பலாசா செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. விசாகப்பட்டினம் கோராபுட் வழித்தடங்களில் இயங்கும் ரெயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

1 More update

Next Story