50 சதவீத மக்களுக்கு எஸ்.ஐ.ஆர் படிவங்களை நிரப்புவதில் சிரமம்


50 சதவீத மக்களுக்கு எஸ்.ஐ.ஆர்  படிவங்களை நிரப்புவதில் சிரமம்
x
Daily Thanthi 2025-11-30 11:38:33.0
t-max-icont-min-icon

திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

எஸ்.ஐ.ஆர். படிவங்களுக்கான காலக்கெடு நீட்டிப்பு திமுகவிற்கு கிடைத்த வெற்றி. எஸ் ஐ ஆர் பணிகள் இன்னும் சிக்கல்கள் நிறைந்ததாகவே இருக்கிறது அவை தீர்க்கப்படவில்லை. எந்த ஒரு விஷயத்தையும் தேர்தல் ஆணையம் வெளிப்படையாக தெரிவிப்பதில்லை. வாக்காளர்களை பாதுகாக்க பணியாற்றும் ஒரே கட்சி தி.மு.க தான். 50 சதவீத மக்களுக்கு எஸ்.ஐ.ஆர் படிவங்களை நிரப்புவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளது.

எஸ்.ஐ.ஆர் பணிகளின்போது வழங்கப்படும் படிவங்களில் வெளிப்படைத்தன்மை வேண்டும்.பீகார் தேர்தலில் வாக்களித்த நபர், தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் படிவத்தை சமர்ப்பிக்கிறார். ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டுமா? என்ற குழப்பங்களுக்கு தேர்தல் ஆணையம் இதுவரை விளக்கமளிக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story